என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியது
Byமாலை மலர்16 July 2018 3:18 AM GMT (Updated: 16 July 2018 3:18 AM GMT)
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 85 அடியை எட்டியது.
மேட்டூர்:
காவிரி ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகுமலை மற்றும் கேரள மாநிலத்தில் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.
இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
124.80 அடி கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 123.43 அடியை எட்டிவிட்டது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 43 ஆயிரத்து 654 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடிதான் பாக்கி இருப்பதால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 32 ஆயிரத்து 7 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மாலை 4 மணிக்கு மேல் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவிகள் மற்றும் பிரதான அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தர்மபுரி கலெக்டர் மலர்விழி, தாசில்தார் அழகுசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட கூடுதல் தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தால், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடிக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 314 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியது.
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாயத்துக்காக விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
காவிரி ஆறு உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகுமலை மற்றும் கேரள மாநிலத்தில் வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.
இதன் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டதால், அவற்றில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
124.80 அடி கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 123.43 அடியை எட்டிவிட்டது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 43 ஆயிரத்து 654 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடிதான் பாக்கி இருப்பதால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 32 ஆயிரத்து 7 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மாலை 4 மணிக்கு மேல் அணையில் இருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவிகள் மற்றும் பிரதான அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
காவிரியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் ஒகேனக்கல்லில் இருந்து மேட்டூர் அணை வரையிலான காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தர்மபுரி கலெக்டர் மலர்விழி, தாசில்தார் அழகுசுந்தரம் மற்றும் அதிகாரிகள் பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட கூடுதல் தண்ணீர் இன்று (திங்கட்கிழமை) மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தால், அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5 அடிக்கும் மேல் உயர வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரத்து 314 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 85 அடியை எட்டியது.
மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாயத்துக்காக விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X