search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியந்தோப்பில் ஓசியில் வாழைப்பழம் கேட்ட வாலிபர் அடித்துக் கொலை
    X

    புளியந்தோப்பில் ஓசியில் வாழைப்பழம் கேட்ட வாலிபர் அடித்துக் கொலை

    புளியந்தோப்பில் ஓசியில் வாழைப்பழம் கேட்ட வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பூர்:

    சென்னை ஓட்டேரி பென்ஸ்லைன் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். மாற்றுதிறனாளியான இவர் புளியந்தோப்பு மணிக்கூண்டு அருகில் தள்ளுவண்டியில் பழக் கடை நடத்தி வருகிறார்.

    ஓட்டேரி சச்சிதானந்தம் தெருவை சேர்ந்த முருகன் என்ற வாலிபர் கடந்த மாதம் 29-ந்தேதி கிருஷ்ணனிடம் ஓசியில் வாபழம் கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிருஷ்ணன் காசு கொடுத்தால் தான் பழம் தருவேன் என்று கூறினார்.

    இதனால் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாகி மோதலாக மாறியது. அப்போது ஆத்திரம் அடைந்த கிருஷ்ணன் உருட்டுக்கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கினார்.

    இதில் முருகனின் நெற்றிப் பொட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ராஜிவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் திவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் முருகன் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ரவி ஏற்கனவே வழக்குப் பதிவு செய்து பழ வியாபாரி கிருஷ்ணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    Next Story
    ×