என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஆம்பூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பக்தர்கள் படுகாயம்
ஆம்பூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா ராடசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). சொந்தமாக வேன் வாங்கி டிரைவராக டிராவல்ஸ் நடத்தி வருகிறார்.
இவர் மனைவி மற்றும் உறவினர்களோடு சேர்த்து 25 பேர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேற்றிரவு வேனில் புறப்பட்டனர்.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வேன் வந்து கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் வேன் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி சாலை அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சிவக்குமார் (வயது 29), பிரவீன்(20), ராமகிருஷ்ணன் (40), பழனியம்மாள் (32), இந்திராணி (50), பிரகாஷ் (19), விஜயராஜ் (26), ராஜசேகர் (26), அம்மையப்பன் (44), தனம் (43), ராஜேஸ்வரி (47), மலர்விழி (21), அழகர்சாமி (60), கோமதி (40) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்