என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி - மணிமுத்தாறில் தடை நீடிப்பு
Byமாலை மலர்14 July 2018 5:26 AM GMT (Updated: 14 July 2018 5:26 AM GMT)
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு இன்று காலை சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது குற்றாலத்தில் சீசன் களை கட்டுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலத்தில் சீசன் அருமையாக இருக்கும். அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணி கள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள்.
இந்தாண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதம் சாரலுடன் சீசன் களை கட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் சாரல் குறைந்த தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் சாரலுடன் குளு, குளு காலநிலை நிலவுகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே போல் நேற்று காலை முதலே குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதனால் மெயினரு வியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு இன்று காலை சற்று குறைந்தது . இதையடுத்து இன்று காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவிகளின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரலுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது குற்றாலத்தில் சீசன் களை கட்டுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குற்றாலத்தில் சீசன் அருமையாக இருக்கும். அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணி கள் குற்றாலத்திற்கு படையெடுத்து வருவார்கள்.
இந்தாண்டு மே மாத இறுதியிலேயே சீசன் தொடங்கியது. தொடர்ந்து ஒரு மாதம் சாரலுடன் சீசன் களை கட்டியது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. ஆனால் இந்த மாத தொடக்கத்தில் சாரல் குறைந்த தால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் கடந்த 7-ந்தேதி முதல் சாரலுடன் குளு, குளு காலநிலை நிலவுகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதே போல் நேற்று காலை முதலே குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதனால் மெயினரு வியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் விழுந்தது. தொடர்ந்து தண்ணீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. புலியருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.
இந்நிலையில் வெள்ளப்பெருக்கு இன்று காலை சற்று குறைந்தது . இதையடுத்து இன்று காலை முதல் சுற்றுலாப்பயணிகள் அருவிகளின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மாஞ்சோலை, நாலுமுக்கு, குதிரைவெட்டி, காக்காச்சி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் சாரலுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததையடுத்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று காலை முதல் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X