என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் இருந்து பாலக்காட்டுக்கு 6 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கசபா போலீஸ் அதிகாரி கங்காதரன், ஒற்றப்பாலம் போலீஸ் அதிகாரி அப்துல்முனிர், பாலக்காடு மாவட்ட மதுவிலக்கு தடுப்புதுறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து கஞ்சிக்கோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோவையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 6 கிலோ கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பாலக்காடு மாவட்டம் வடகஞ்சேரியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28), ஒற்றப்பாலத்தை சேர்ந்த விஷ்ணு (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் கூறும்போது, கஞ்சாவை விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் கோவைக்கு கடத்தி வந்த பின்னர் இங்கு தயாராக இருக்கும் மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தியதாக கூறினர்.
இதனையடுத்து அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்