search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரவை அமல்படுத்தாத மதுராந்தகம் தாசில்தார் யார்? - காஞ்சீபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    உத்தரவை அமல்படுத்தாத மதுராந்தகம் தாசில்தார் யார்? - காஞ்சீபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட்டு கேள்வி

    உத்தரவை அமல்படுத்தாத மதுராந்தகம் தாசில்தார் யார்? என்று காஞ்சீபுரம் கலெக்டருக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #Highcourt

    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த கே.ஜி.எத்திராஜ். தனது 9 சென்ட் நிலத்துக்கு பட்டா கேட்டு மதுராந்தகம் தாசில் தாரிடம் விண்ணப்பம் செய்தார்.

    அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது கோரிக்கையை பரிசீலித்து பட்டா வழங்க ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இதனடிப்படையில் தாசில்தார் ஏழரை சென்ட் நிலத்துக்கு மட்டுமே பட்டா வழங்கினார்.

    இதையடுத்து மதுராந்தகம் தாசில்தார் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். 2013-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிசத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கோர்ட்டு உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் வக்கீல் சத்தியா வாதிட்டார்.

    இதையடுத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, 2013-ம் ஆண்டு முதல் மதுராந்தகத்தில் தாசில் தார்களாக இருந்தவர்கள் யார்? அவர்களது பெயர் என்ன? ஏன் அவர்கள் ஐகோர்ட்டு உத்தரவை 5 ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் காஞ்சீபுரம் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #Highcourt

    Next Story
    ×