search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
    X

    ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

    இலங்கை கடற்படையயை கண்டித்து 2-வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #Fishermenstrike

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களையும், விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் செல்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும் என மீனவ சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேசுவரம், மண்டபத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

    இவர்கள் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மீன்பிடி தடைக்காலத்திற்கு பின் இலங்கை கடற்படையினர் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அங்கு பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ள 187 விசைப் படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

    இதற்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி நேற்று முதல் ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக 650 விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகம் வெறிச் சோடி காணப்பட்டது. இன்றும் 2-வது நாளாக மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

    இது குறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைகாலம் முடிந்து ஆர்வத்துடன் மீன்பிடிக்கச் சென்றால் இலங்கை கடற்படை எங்களை தாக்கி விரட்டியடிக்கிறது. இதனால் உயிர் பயத்துடனேயே தொழிலுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர். #Fishermenstrike

    Next Story
    ×