என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
ராமேசுவரம்:
கடந்த 2 நாட்களுக்கு முன்பு எல்லை தாண்டி வந்ததாக கூறி மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த 12 மீனவர்களை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர். மேலும் மீனவர்களையும் தாக்கி விரட்டியடித்தனர்.
அங்குள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்கள் சங்கங்கள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையயை கண்டித்து இன்று ராமேசுவரம் துறைமுக விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடை பெற்றது. இதனால் 110 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதில் பங்கேற்றனர்.
மீனவர்களை விடுவிக்க உடனே நடவடிக்கை எடுக்காவிடில் எங்களது போராட்டம் தீவிரமடையும் என மீனவர் சங்கத்தினர் தெரிவித்தனர். #Fishermenstrike
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்