என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிலை மோசடி வழக்கு: முன்னாள் அறநிலையத்துறை அதிகாரி கும்பகோணம் கோர்ட்டில் சரண்
கும்பகோணம்:
பழனி பால தண்டாயுத பாணி சிலை வடிவமைப் பதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சிலையை வடிவமைத்த கோவில் ஸ்தபதி முத்தையா என்பவர் பழனி கோவில் இணை ஆணையராக பதவி வகித்த ராஜா 2 பேரையும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
மேலும் இந்தவழக்கில் நகை சரிபார்ப்பு அலுவலர்களான புகழேந்தி, தேவேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் தற்போது ஜாமீனில் வெளியில் வந்துள்ளனர்.
மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவர் தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்கிடையில் 2முறை முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் தனபால் மனு தாக்கல் செய்திருந்தார். அதன்பிறகு கடந்த 15 தினங்களுக்கு முன்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்தவழக்கு நடைபெறும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் நேரடி கண்காணிப்பில் கும்பகோணத்தில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதனால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தனபால் வருகைக்காக கும்பகோணம் நீதிமன்றத்தில் தினமும் காத்திருந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை கும்பகோணம் 2-வது நடுவர் நீதிமன்றத்தில் தனபால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை அடுத்து காலை 10 மணிக்கு நீதிமன்றத்தில் தனபால் சரண் அடைந்தார்.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி கோதண்டராமன் விசாரணையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து அதுவரை நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியில் செல்லக் கூடாது என உத்தரவிட்டார். #Idolsmuggling
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்