search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு ஒத்திவைப்பு
    X

    முல்லைப் பெரியாறு அணையில் மத்திய குழு ஆய்வு ஒத்திவைப்பு

    முல்லைப் பெரியாறு அணையில் மத்திய தலைமை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    கூடலூர்:

    முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கவும், அணையை கண்காணிக்க 3 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய தலைமை கண்காணிப்பு குழு அமைக்கவும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

    மேலும் இந்த குழுவுக்கு உதவ 5 பேர் கொண்ட துணைக் குழுவும் அமைக்கப்பட்டது. பருவமழை காலங்களில் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து, நீர் கசிவு, நீர் வெளியேற்றம், பாதுகாப்பு குறித்து துணைக்குழு ஆய்வு செய்து மூவர் குழுவுக்கு அறிக்கை அனுப்பும்.

    கடந்த 15-ந் தேதி மத்திய துணைக்குழுவினர் அணையை பார்வையிட்டு 6 மதகுகளின் கதவுகளை இயக்கிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து இன்று (21-ந் தேதி) தலைமை கண்காணிப்பு குழுவின் தலைவர் குல்‌ஷன்ராஜ், தமிழக அரசின் பிரதிநிதி பிரபாகரன், கேரள அரசின் பிரதிநிதி டிங்கு பிஸ்வால் ஆகியோர் ஆய்வுக்கு வருவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தற்போது இந்த ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 2-வது வாரத்தில் ஆய்வு நடைபெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×