என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிர்மலா தேவி விவகாரம்: ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Byமாலை மலர்18 Jun 2018 7:03 AM GMT (Updated: 18 Jun 2018 7:03 AM GMT)
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi
மதுரை:
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வக்கீல், கருப்பசாமிக்கும் இந்த வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
அதைத் தொடர்ந்து கருப்பசாமி சார்பில் ஆஜரான வக்கீல் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அதே கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
இவர் கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் கருப்பசாமி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான வக்கீல், கருப்பசாமிக்கும் இந்த வழக்கில் தொடர்புடைய முதல் குற்றவாளிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. எனவே ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
அதைத் தொடர்ந்து கருப்பசாமி சார்பில் ஆஜரான வக்கீல் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து கருப்பசாமியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 19-ந்தேதிக்கு (நாளை) ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். #NirmalaDevi #NirmalaDeviCase
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X