என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வருசநாடு மலைப்பகுதியில் மாறுவேடத்தில் நக்சல் தேடுதல் வேட்டை
Byமாலை மலர்12 Jun 2018 4:49 AM GMT (Updated: 12 Jun 2018 4:49 AM GMT)
வருசநாடு வனப்பகுதியில் மாறுவேடத்தில் நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். #Maoist
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் வருசநாடு வனப்பகுதிக்குட்பட்ட காந்திகிராமம், அஞ்சரப்புளி, வலஸ்தொழுவு, வெள்ளிமலை, கூடம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம், கஞ்சா செடிகள் பயிரிடுதல், போதை பொருட்கள் பயிரிடப்படல் ஆகியவை உள்ளதா? என கண்டறிய மாவட்ட நக்சல் தடுப்பு, போதை தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மற்றும் வருசநாடு போலீசாருடன் இணைந்து வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
இவர்கள் மாறுவேடத்தில் சென்று மலைகிராம மக்களிடம் மர்ம நபர்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர். வருசநாடு வனப்பகுதி முதல் அரசரடி மலைகிராமம் வரை இந்த தேடுதல் வேட்டை நடந்தது.
வனப்பகுதியில் குழுக்களாக முகாமிட்டு அவர்கள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முகம் தெரியாத நபர்கள் வனப்பகுதியில் உலவினால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. #Maoist
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X