என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
35-வது நாளாக தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
Byமாலை மலர்3 Jun 2018 4:48 AM GMT (Updated: 3 Jun 2018 4:48 AM GMT)
கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 35-வது நாளாக தொடருவதால் சுமார் 17½ கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில்:
இந்த நிலையில் கூலி உயர்வு தொடர்பாக நெல்லை தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் ஏற்கனவே 4 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பாளையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் 5-வது கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முடிவு எதுவும் எட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தை 5-வது முறையாக தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பாளை தொழிலாளர் நல துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 35-வது நாளாக நீடிக்கிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுமார் 17½ கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X