என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பணி நேரம் முடிந்ததால் மீண்டும் விமானத்தை இயக்க விமானிகள் மறுப்பு - 10 மணி நேரம் பயணிகள் தவிப்பு
மதுரை:
சிங்கப்பூரில் இருந்து மதுரை வழியாக கொச்சி செல்லும் விமானம் இரவு 11 மணிக்கு வந்து பின்னர் கொச்சிக்கு புறப்பட்டுச் செல்லும். வழக்கம்போல் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட விமானம் சரியான நேரத்துக்கு அதாவது 11 மணிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
2½ மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது. 11 மணியுடன் பணி நேரம் முடிந்ததால் மீண்டும் விமானத்தை இயக்க விமானிகள் மறுத்து விட்டனர்.
எனவே நள்ளிரவில் வந்த சிங்கப்பூர் விமானம் மீண்டும் கொச்சி புறப்பட்டு செல்லவில்லை. அந்த விமானத்தில் வந்த கொச்சி பயணிகள் 8 பேர் மதுரை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த விமானம் இன்று காலை 8.30 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் 10 மணி நேரம் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்