search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனக்கு வைத்த குறி என் தோழி உயிரை பறித்து விட்டது- தூத்துக்குடி பெண் கண்ணீர் பேட்டி
    X

    எனக்கு வைத்த குறி என் தோழி உயிரை பறித்து விட்டது- தூத்துக்குடி பெண் கண்ணீர் பேட்டி

    தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, தனக்கு வைத்த குறி தன் தோழியின் உயிரை பறித்து விட்டதாக காயமடைந்த பெண் கூறியுள்ளார். #Thoothukudifiring #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த‌ துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஸ்னோலின் பள்ளி மாணவியாவார். இவரது தோழி இன்பென்டா என்பவர் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அர‌சு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தோழியின் மரணம் குறித்து இன்பென்டா கூறியதாவது:-

    நாங்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு செல்லும் முன்பே அங்கு வாகனங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதை தீ வைத்தது யார் என்று தெரியவில்லை. துப்பாக்கி சூடு நடந்தபோது எங்களை தாக்க‌ வந்த‌ போலீசார் கைகளில் லத்தி மட்டும்தான் இருந்தது.

    துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் மேலேயிருந்து வந்தன. நானும் பலியான ஸ்னோலினும் ஒன்றாக போராட்டங்களில் பங்கேற்றோம். எனக்கு வைத்த குறி என் தோழியை பலிவாங்கிவிட்டது. அவர் குண்டடி பட்ட நிலையிலும் என்னை காப்பாற்ற ஓடி வந்தார். கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றால் எங்கள் குறைகள் தீரும் என்று நினைத்தோம்.

    ஆனால் இப்படி செய்துவிட்டனர். தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் போலீசாரின் கெடுபிடிகள் தொடர்கின்றன. சரியான சாப்பாடு கிடைக்கவில்லை. தண்ணீர் கிடைக்கவில்லை. எங்களுக்கு நிவாரணம் தேவையில்லை. ஸ்டெர்லைட்டை மூடினாலே போதும்.

    இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார். #Thoothukudifiring #SterliteProtest
    Next Story
    ×