என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்
Byமாலை மலர்19 May 2018 6:29 AM GMT (Updated: 19 May 2018 6:29 AM GMT)
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோபி:
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மைய திறப்பு விழா இன்று நடந்தது.
இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜூன் மாதத்தில் 4 வகை சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னதாகவே வெளியிட தயார் நிலையில் தேர்வு முடிவுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையே’’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ‘‘அங்கு முழுமையாக தெலுங்கு பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆகையால் அங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெலுங்கு தெரிந்த, பேசும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்று கூறினார்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மைய திறப்பு விழா இன்று நடந்தது.
இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அதில் மாற்றம் இல்லை. புதிய பாட திட்டத்தில் 185 நாட்கள் பாடங்கள் நடத்தப்பட வேண்டும். 1, 6, 9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாட திட்டங்கள் மூலமாக தமிழக கல்வித் துறையை இந்தியாவே திரும்பி பார்க்கும்.
ஜூன் மாதத்தில் 4 வகை சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னதாகவே வெளியிட தயார் நிலையில் தேர்வு முடிவுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையே’’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ‘‘அங்கு முழுமையாக தெலுங்கு பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆகையால் அங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெலுங்கு தெரிந்த, பேசும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X