search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 21-ந்தேதி டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்
    X

    கோவையில் 21-ந்தேதி டி.டி.வி. தினகரன் ஆர்ப்பாட்டம்

    கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடைபெறுகிறது.
    கோவை:

    கோவையில் அ.தி.மு.க. வினர் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதுகுறித்து தினகரன் அணி அமைப்பு செயலாளரும், கோவை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சேலஞ்சர் துரை கூறியதாவது-

    எங்கள் கட்சியின் பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடவள்ளி பகுதி செயலாளர் கருப்பசாமி வீட்டில் நடைபெற்றது.

    கூட்டம் முடிந்த பின்னர் நாங்கள் அமைதியான முறையில் வந்து கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க.வினர் எங்கள் காரை வழி மறித்து தாக்குதல் நடத்தினார்கள். நிறைய கார்கள் தாக்கப்பட்டது.



    இதனை கண்டித்து நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். எங்களை கைது செய்து உள்ளனர். எங்கள் காரை உடைத்தவர்களை போலீசார் கைது செய்யாமல் எங்களை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

    அ.திமு.க.வினர் அவர்களாகவே தங்கள் காரை உடைத்து விட்டு நாங்கள் உடைத்ததாக கூறி உள்ளனர். இதில் எங்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து வருகிற 21-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் கோவையில் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×