search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் - காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
    X

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் - காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi
    மதுரை:

    மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி, துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் விசாரித்தனர்.



    நிர்மலாதேவி கூறிய தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சரண் அடைந்த அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். மேலும் காமராஜர் பல்கலைக் கழகத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அதன்பிறகு விசாரணையில் தொய்வு நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி மற்றும் போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று மீண்டும் விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi


    Next Story
    ×