search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்திற்கு 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு
    X

    நீலகிரி மாவட்டத்திற்கு 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை- கலெக்டர் அறிவிப்பு

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களை கட்டி உள்ளது. இதையொட்டி கூடலூரில் நாளை வாசனை திரவிய கண்காட்சி தொடங்குகிறது. 12-ந் தேதி ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.

    வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 5 நாட்கள் ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற 18-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    ஊட்டியில் 122-வது மலர் கண்காட்சி வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    இந்நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்பு நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும்.18-ந் தேதிக்கான வேலை நாளை ஈடு செய்ய வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திற்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Tamilnews
    Next Story
    ×