search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்- அமைச்சர் வேலுமணி பேச்சு
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்- அமைச்சர் வேலுமணி பேச்சு

    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று அரியலூர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசினார்.

    அரியலூர்:

    அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி மேலாண்மை அமைக்கவும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி அரியலூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அரசு தலைமை கொறடாவும், அரியலூர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளருமான தாமரை.எஸ். ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும் போது கூறியதாவது:-

    காவிரி நதிநீர் பிரச்சினையில் கடைசிவரை போராடியவர் ஜெயலலிதா. காவிரி விவகாரத்தில் 50 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. 1974-ல் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர் புதுப்பிக்க தவறிவிட்டனர். கட்சத்தீவு பிரச்சினையில் பச்சை கொடி காட்டியது தி.மு.க. ஆட்சியில்தான்.

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி. இவர்கள் நினைத்திருந்தால் அனைத்து பிரச்சினைகளையும் முடித்திருக்கலாம். இதை புரிந்து கொள்ளாமல் ஸ்டாலின் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். ஸ்டாலின் செய்த மிகப்பெரிய சாதனையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்தது தான்.

    ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தினகரனை நீக்கி வைத்தார். கட்சியில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. அவர் ஜெயலலி தாவின் வாரிசு என்று கூறி வருகிறார். அ.தி.மு.க. தொண்டன் ஒருவன் கூட அவர் பின் செல்ல மாட்டான். ஸ்டாலின், தினகரன் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

    நான் இந்த மாவட்டங்களை சுற்றி சுற்றி வந்தவன். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என ஜெயலலிதா கூறினார். நான் இந்த பொதுக்கூட்டத்தை பார்க்கும்போது பொதுக்கூட்டமா? மாநாடா? என்று என்ன தோன்றுகின்றது. நாடாளு மன்ற தேர்தலாக இருக்கட்டும், சட்டமன்ற தேர்தலாகட்டும்.

    உள்ளாட்சி தேர்தலாகட்டும், வெற்றி பெறப்போவது நாம் தான். இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ? முடியாது. இது காலத்தின் கட்டாயம். அரியலூர் மாவட்ட செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் இரட்டை குழல் துப்பாக்கிகள்.

    1974-ல் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். புதுப்பிக்க தவறியது தி.மு.க.தான். விவசாயிகள் போட்ட வழக்கை வாபஸ் பெற செய்தது கருணாநிதிதான். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி. அவர்கள் நினைத்திருந்தால் அனைத்து பிரச்சினையையும் தீர்த்து வைத்திருக்கலாம்.

    தமிழர்களின் உரிமையை அடகு வைத்தவர் கருணாநிதி. தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்க்க அ.தி.மு.க. தொடர்ந்து போராடி வருகின்றது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அலட்சியப்படுத்தி வருகிறது.

    இந்த பிரச்சினையில் அனைத்து கட்சி கூட்டம், உண்ணாவிரதம், பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews

    Next Story
    ×