என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சென்னையில் தினமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு - பொதுமக்கள் அவதி
சென்னை:
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை இல்லை. தேவைக்கு அதிகமாக உள்ளது என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் சென்னையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
சென்னையில் ஆர்.ஏ.புரம், கோட்டூர் புரம், அடையாறு, மந்தைவெளி, நங்கநல்லூர், ஆலந்தூரின் ஒரு பகுதி மற்றும் வடசென்னையில் இந்த நிலை உள்ளது.
பெரும்பாலும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வியர்வை, புழுக்கம் மற்றும் கொசுக்கடியால் தூக்கமின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆனால் இதை தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் மறுக்கின்றனர். அனைத்து துணை மின் நிலையங்களும் ரெகுலராக பராமரிக்கப்பட்டு வருகிறது. பழைய கேபிள்களால் எந்த பிரச்சினையும் இல்லை.
தற்போது கோடைகாலம் என்பதால் மின்சார‘லோடு’ அதிகரித்து அறிவிக்கப்படாத மின்தடை ஏற்படுகிறது. உடனே எங்களது ஊழியர்கள் அங்கு சென்று அதை விரைவில் சரிசெய்கின்றனர்.
சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு 1912 உதவி எண் மூலம் நுகர்வோரிடம் இருந்து மின்வினியோகம் குறித்த புகார்கள் பெறப்பட்டு அவை உடனடியாக தீர்த்து வைக்கப்படுகின்றன என தெரிவித்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்