என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பைப் வெடிகுண்டு வழக்கு - முன்னாள் உள்துறை செயலாளர் திண்டுக்கல் கோர்ட்டில் சாட்சியம்
திண்டுக்கல்:
பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடந்த 2001-ம் ஆண்டு மதுரை வழியாக ரத யாத்திரை மேற்கொண்டார். அப்போது பைப் வெடிகுண்டு மூலம் அவரை கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்த வழக்கில் தென்காசியைச் சேர்ந்த முகமது அனீபா சம்பந்தப்பட்டு இருக்கலாம் என போலீசார் அவரை தேடி வந்தனர்.
வத்தலக்குண்டு அருகே வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது டி.எஸ்.பி கார்த்திகேயனை, அனிபா தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார்.
இது குறித்த வழக்கு திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக தமிழக முன்னாள் உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதையடுத்து விசாரணையை நாளை மறு நாள் (23-ந் தேதிக்கு) ஒத்தி வைத்து நீதிபதி முரளி சங்கர் உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்