search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 17 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்
    X

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 17 இடங்களில் பொதுமக்கள் போராட்டம்

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் 17 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் 17 இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அவர்களது போராட்டம் இன்று 66-வது நாளாக நீடிக்கிறது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே தூத்துக்குடி சோரிஸ்புரம் பகுதி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. முற்றுகையிட பொதுமக்கள் வந்தால் கைது நடவடிக்கையில் ஈடுபடவும் போலீசார் தயாரானார்கள்.

    இதைத்தொடர்ந்து சோரிஸ்புரம் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் செல்லாமல் தங்களது பகுதியிலேயே போராட்டம் நடத்தினர். இன்றும் சோரிஸ்புரம் பொதுமக்கள் அங்குள்ள மைதானத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டெர்லைட்டு ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் தற்போது 17 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மேலும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் போராட்டக்குழுக்களை ஏற்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்த பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர்.
    Next Story
    ×