என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மீது அரசு விரைவுபஸ் மோதியதில் 3 பேர் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த விக்னேஷ்வரன், மகேந்திரன், மோகன்ராஜ், வெங்கடேசன் ஆகியோர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மில்லுக்கு ஒரு எந்திரத்தை ஏற்றிக் கொண்டு சரக்கு ஆட்டோவில் புறப்பட்டனர். ஆட்டோவை பொன்னம் பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 21) என்பவர் ஓட்டினார்.
எந்திரத்தை இறக்கி விட்டு இன்று காலை சரக்கு ஆட்டோவில் அவர்கள் ஊருக்கு புறப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரத்தை அடுத்த மாயிருளம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 8.30 மணியளவில் வந்தபோது எதிரே சென்னையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசு விரைவு பஸ் வந்தது. எதிர்பாராத விதமாக அந்த பஸ் சரக்கு ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். விக்னேஷ்வரன், மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டிரைவர் பாலாஜி பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ் (28), வெங்கடேசன் (25) ஆகியோர் முதலுதவி பெற்ற பிறகு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி அரசு பஸ் டிரைவர் சிவகிரியைச் சேர்ந்த வீரகுமார் (28) என்பவரை கைது செய்தனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்