என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை நீட்டிப்பு
Byமாலை மலர்13 April 2018 3:22 AM GMT (Updated: 13 April 2018 3:22 AM GMT)
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நடந்து வரும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. எனவே இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபோல மேலும் பலர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முடிவில், ‘வழக்கின் எதிர்மனுதாரர்களுள் ஒருவரான அ.தி.மு.க. தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டியது உள்ளது. அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நடந்து வரும் கூட்டுறவு சங்க தேர்தல்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகின்றன. எனவே இந்த தேர்தல் தொடர்பான அறிவிப்பை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுபோல மேலும் பலர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
முடிவில், ‘வழக்கின் எதிர்மனுதாரர்களுள் ஒருவரான அ.தி.மு.க. தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டியது உள்ளது. அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வருகிற 23-ந் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X