search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். போட்டி இடமாற்றம்- திருமாவளவன் வரவேற்பு
    X

    ஐ.பி.எல். போட்டி இடமாற்றம்- திருமாவளவன் வரவேற்பு

    ஐ.பி.எல். போட்டிகளை வேறு ஊர்களுக்கு மாற்றுவதென்று எடுக்கப்பட்டுள்ள முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து எஞ்சிய போட்டிகளை வேறு ஊர்களுக்கு மாற்றுவதென்று எடுக்கப்பட்டுள்ள முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.

    இந்த முடிவை முன் கூட்டியே எடுத்திருந்தால் தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பதாக அமைந்திருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறோம்.

    ஐ.பி.எல். போட்டியில் எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக முறையில் போராடியவர்கள் மீது தமிழக அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். அது தொடர்பாக போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    காவல்துறை ஏவிய வன்முறையை மூடி மறைத்து விட்டு காவலவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ரஜினி காந்த் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    அப்பாவி மக்கள் மீது ஒவ்வொரு நாளும் காவல் துறையினர் ஏவி வரும் வன்முறைகள் அவருக்கு தெரியாதா? போராடுகிறவர்களை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என்ற விதத்தில் அவர் பேசியிருப்பது அவருக்குள் இருக்கும் சர்வாதிகார மன நிலையையே வெளிப்படுத்துகிறது என்பதை அவருக்கு சுட்டிக் காட்டுகிறோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #IPL #CauveryIssue
    Next Story
    ×