என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருக்கோவிலூர் மாணவன் கொலை: கைதான தில்லைநாதன் மீது மேலும் 3 பெண்கள் புகார்
திருக்கோவிலூர்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆராயி(வயது 45). இவருடைய மகள் தனம்(14).மகன் சமயன்(9). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஆராயி தனது மகன் சமயன், மகள் தனம் ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர் சமயனை அடித்து கொலை செய்து, ஆராயி, தனத்தை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடலூர் மாவட்டம் மேல்புனகிரியை சேர்ந்த தில்லைநாதன் (37) கைது செய்தனர்.
அவருக்கு உடந்தையாக இருந்த அவனது கள்ளக்காதலி அம்பிகாவையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் தில்லைநாதனை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலூர் அருகே திருப்பாலபந்தல் போலீஸ் நிலையத்தில் வைத்து தில்லைநாதனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் வந்து, தில்லைநாதனிடம் சமயன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும் இவருக்கு வேறு ஏதாவது கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கிறதா என்றும் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் வெள்ளம்புத்தூர் சம்பவம் மட்டுமின்றி, மேலும் ஒரு தாலி செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதையும் தில்லைநாதன் ஒப்புக்கொண்டார்.
இன்று துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், மற்றும் தனிப்படை போலீசார் தில்லை நாதனை வெள்ளம்புத்தூர் கிராமத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆராயி வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தியது எப்படி என்று தில்லை நாதன் நடித்து காட்டினான். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே கைதான தில்லை நாதன் மீது வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த 4 பெண்கள் அரகண்ட நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருந்தனர். தில்லை நாதன் வீடு புகுந்து தங்களிடம் இருந்த நகைகளை பறித்து சென்றுவிட்டான் என புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் அரகண்ட நல்லூர் போலீசில் புகார் செய்துள்ளனர். அதில் 2 பெண்கள் தில்லை நாதன் வீடு புகுந்து நகை பறித்து சென்றதாகவும், ஒரு பெண் வீட்டில் இருந்த பெட் ஷீட்டைதிருடி சென்று விட்டதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்