search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரங்கணி தீ விபத்து - டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரை கைது செய்ய தடை
    X

    குரங்கணி தீ விபத்து - டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரை கைது செய்ய தடை

    தேனி குரங்கணி தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் அவர்களை அழைத்துச் சென்ற டிரெக்கிங் கிளப் நிர்வாகி பீட்டரை கைது செய்ய வரும் 12-ம் தேதி வரை தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #TheniFire
    சென்னை:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், கடந்த 11-ந்தேதி காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில் தற்போது வரை 22 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோட்டில் இருந்து மலையேற்ற பயிற்சிக்கு சுற்றுலா பயணிகளை பேஸ்புக் மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வந்த, ஈரோடு சென்னிமலையை சேர்ந்த சுற்றுலா அலுவலக உரிமையாளர் பிரபு என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    மேலும் இதுதொடர்பாக சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஒருங்கிணைத்து அனுப்பியதாக கூறப்படும், சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் ஜியாட்டை பிடிக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பீட்டர் வான் கெய்ட் முன் ஜாமின் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். மலையேற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று அவருடைய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்மனு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது சென்னை டிரக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டரை கைது செய்ய ஏப்.12 வரை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #TheniFire #TamilNews
    Next Story
    ×