search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை படத்தில் காணலாம்.

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

    திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து வந்த பயணியிடம் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து வந்த பயணியிடம் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    நேற்றிரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த அபுதாகிர் என்பவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

    அப்போது அவர் பேண்ட் பாக்கெட்டில் மறைத்து எடுத்து வந்த ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள 239 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.




    Next Story
    ×