search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய இளைஞர்கள்
    X
    தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டிய இளைஞர்கள்

    தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்- திருவண்ணாமலையில் 50 இளைஞர்கள் கைது

    திருவண்ணாமலையில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் செய்த ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சக்திகேந்திரம் மற்றும் மகா சக்திகேந்திரம் பொருப்பாளர்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று அவர் சாமி தரிசனம் செய்தார்.

    இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்கா முன்பு தமிழிசை சவுந்தரராஜனுக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

    திருவண்ணாமலை வடக்கு போலீசார், கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    Next Story
    ×