என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செயின் பறித்த பைக் கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு - தகவல் கொடுத்தால் சன்மானம்
Byமாலை மலர்24 March 2018 4:47 AM GMT (Updated: 24 March 2018 4:47 AM GMT)
பாணாவரம் அருகே நகையை பறித்தபோது பெண் சுகாதார ஆய்வாளர் பலியான வழக்கில் மோட்டார்சைக்கிளில் தப்பிய கொள்ளையர்கள் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
வேலூர்:
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 50). இவர் பாணாவரம் அருகே உள்ள புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி அவர் தனது கணவர் வீராசாமியுடன் பாணாவரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். மாங்குப்பம் தைலமர தோப்பு அருகே சென்றபோது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் நகையை பறித்ததில் நிலைதடுமாறிய வீராசாமி, மல்லிகா ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் கொலைவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மல்லிகாவிடம் நகை பறித்த கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்துவந்தபோது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் 2 வாலிபர்கள் பைக்கில் வருவது பதிவாகியுள்ளது.
கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு, பாணாவரம் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதோடு அவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். #tamilnews
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 50). இவர் பாணாவரம் அருகே உள்ள புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 20-ந் தேதி அவர் தனது கணவர் வீராசாமியுடன் பாணாவரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். மாங்குப்பம் தைலமர தோப்பு அருகே சென்றபோது அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் நகையை பறித்ததில் நிலைதடுமாறிய வீராசாமி, மல்லிகா ஆகிய இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் கொலைவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மல்லிகாவிடம் நகை பறித்த கொள்ளையர்கள் மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்துவந்தபோது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில் 2 வாலிபர்கள் பைக்கில் வருவது பதிவாகியுள்ளது.
கொள்ளையர்கள் பற்றி தகவல் தெரிந்தவர்கள் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு, பாணாவரம் இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதோடு அவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X