search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது
    X

    திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் தொடங்குகிறது

    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளார்க் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
    திருச்செந்தூர்:

    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கிளார்க் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு www.sbi.co.in என்ற இணையதளத்தின் வழியாக 10-2-2018-க்குள் விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

    இந்த தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறது.

    இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இந்த பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம்(ஏப்ரல்) 19-ந்தேதி முதல் மே மாதம் 5-ந்தேதி வரை திருச்செந்தூர், சிவந்தி அகாடமி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் வெளியே செல்ல மற்றும் விடுப்பு எடுக்க அனுமதியில்லை.

    இந்த பயிற்சி வகுப்பில் பொது அறிவு, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த வல்லுநர்கள் மிகவும் சிறப்பாக பயிற்சி அளிப்பார்கள்.

    பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மகளிர் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் அதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்து 400-ஐ பயிற்சி வகுப்பின் முதல் நாளான 19-4-2018 அன்று செலுத்த வேண்டும்.

    பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம், ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.4 ஆயிரத்துக்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, வீரபாண்டியன்பட்டணம், -628216, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    பயிற்சி வகுப்பில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டிய கடைசி நாள் 10-4-2018 ஆகும்.

    பயிற்சி கட்டணம் மற்றும் விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது.

    மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.

    இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார். #tamilnews
    Next Story
    ×