என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கேரளாவில் அபூர்வ ஆமை கடத்தல்- 2 வாலிபர்கள் கைது
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் சாலக்குடி மதுவிலக்குத்துறை அதிகாரி கிரிஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதே பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மொபட்டில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது மொபட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கு பையில் இந்தியாவில் அதிவேகமாக அழிந்து வரும் உயிரினமான ‘ஏசியன் ஜாஷாதிக் டோர்டஸ்’ என்ற ஆமை இருந்தது. இந்த வகை ஆமைகள் ஏரி, குளம், குட்டைகளில் வசிக்க கூடியதாகும். இந்த ஆமையை வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் மீறி வைத்திருந்தால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் சட்டம் உள்ளது.
ஆமையை கைப்பற்றிய போலீசார் அதனை கடத்திய வைசாலியை சேர்ந்த சுரேஷ் (வயது 28), வெற்றிலையை சேர்ந்த மனேஸ் (27) ஆகியோரை கைது செய்து வன அதிகாரி வின்சென்டிடம் ஒப்படைத்தனர்.
சாலக்குடி வனத்துறையினர் கடத்தப்பட்ட ஆமையின் எடையை பரிசோதனை செய்தபோது அது 24 கிலோ இருந்தது. பின்னர் அதனை சாலக்குடியி வனப்பகுதியில் உள்ள நீர்நிலையில் விட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்