என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மூலனூரில் ஐபேடு வெடித்து பள்ளி மாணவர் காயம்
Byமாலை மலர்17 March 2018 4:02 AM GMT (Updated: 17 March 2018 4:02 AM GMT)
மூலனூரில் ஐபேடு வெடித்ததில் பள்ளி மாணவர் பால்ராஜின் வலது தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
மூலனூர்:
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள நத்தப்பாளையத்தை அடுத்தமேட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் பால்ராஜ் (வயது14). மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளியில் தேர்வுகள் நடைபெறுவதால் காலையில் வீட்டில் இருந்த பால்ராஜ் தன்னிடம் இருந்த ஐபேடில் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தார். ஒரு சமயத்தில் தனது ஐபேடை பேன்ட் பாக்கெட்டில் வைத்தார். சிறிது நேரத்தில் அந்த ஐபேடு திடீர் என்று வெடித்து சிதறியது. இதில் பால்ராஜின் வலது தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர். மகன் ஐபேடு வெடித்து மகனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்தனர். பின்னர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து மூலனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஐபேடு பேட்டரி சார்ஜ் முழுமையாக ஏற்றியும், நீண்ட நேரம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த நிலையில் பேட்டரி வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர். #tamilnews
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள நத்தப்பாளையத்தை அடுத்தமேட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் பால்ராஜ் (வயது14). மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று பள்ளியில் தேர்வுகள் நடைபெறுவதால் காலையில் வீட்டில் இருந்த பால்ராஜ் தன்னிடம் இருந்த ஐபேடில் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தார். ஒரு சமயத்தில் தனது ஐபேடை பேன்ட் பாக்கெட்டில் வைத்தார். சிறிது நேரத்தில் அந்த ஐபேடு திடீர் என்று வெடித்து சிதறியது. இதில் பால்ராஜின் வலது தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர். மகன் ஐபேடு வெடித்து மகனுக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்தனர். பின்னர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து மூலனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஐபேடு பேட்டரி சார்ஜ் முழுமையாக ஏற்றியும், நீண்ட நேரம் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்த நிலையில் பேட்டரி வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X