search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.5 அடியாக குறைந்தது
    X

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.5 அடியாக குறைந்தது

    வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.5 அடியாக குறைந்தது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர இந்த ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் தேவைக்காக 72 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வரத்தொடங்கியது. கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையாலும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதன்காரணமாக ஏரியின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து, முழுகொள்ளளவை எட்டியது. உபரிநீர் வெள்ளாற்றில் திறந்து விடப்பட்டு, வீணாக கடலில் கலந்தது.

    இந்த நிலையில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக மழை இல்லை. ஏரிக்கு நீர் வரத்தும் இல்லை. வெயில் சுட்டெரிப்பதால் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. எனவே சென்னைக்கு அனுப்பப்பட்டது.

    பின்னர் 70 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இதையடுத்து 54,44,37,27 கன அடி என்று படிப்படியாக தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது. நேற்று 18 கனஅடி தண்ணீர் மட்டும் அனுப்பப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.10 அடியாக இருந்தது. இன்று அது 39.5 அடியாக குறைந்து விட்டது.

    எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்து விட்டது.

    எனவே ஏரியில் இருந்து சென்னைக்கு இன்று அல்லது நாளைக்குள் குடிநீர் அனுப்புவது நிறுத்தப்படும் என்று கூறினார். #Tamilnews
    Next Story
    ×