என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகம் முழுவதும் எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டம்
Byமாலை மலர்7 March 2018 5:55 AM GMT (Updated: 7 March 2018 5:55 AM GMT)
தமிழகம் முழுவதும் எச்.ராஜாவுக்கு எதிராக பெரியார் சிலை முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் எச்.ராஜா உருவ பொம்மையையும், உருவப்படத்தையும் தீ வைத்து எரித்தனர். #Periyarstatue
தஞ்சாவூர்:
பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் எச்.ராஜா உருவபொம்மையையும், உருவப்படத்தையும் தீ வைத்து எரித்தனர்.
ஒரத்தநாட்டில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காந்தி தலைமையில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவபடத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் உள்ள கட்ட பொம்மன் சிலை அருகே திராவிடர் கழகத்தினர் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்லாததால் மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பில் தி.மு.க.வினர் இன்று காலை எச்.ராஜா உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை பஜார் வீதியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா தலைமையில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது திடீரென எச்.ராஜா உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தி.க., தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சிலர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.
ஆண்டிமடத்தில் திராவிடர் கழகம் சார்பில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி நான்கு ரோட்டில் அவரது உருவப்படத்தை எரித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
கடலூர் பாரதி சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே அரசியல் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எச்.ராஜாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எச்.ராஜாவை கண்டித்தும் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடியாத்தத்தில் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெமிலி பஸ் நிலையத்தில் திராவிட விடுதலை கழகம் சார்பில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது எச்.ராஜாவின் உருவபொம்மையை திராவிட விடுதலை கழக நிர்வாகிகள் எரிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை எரிக்கவிடாமல் தடுத்தனர்.
இதனால் திராவிட விடுதலை கழக நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாணியம்பாடி பஸ் நிறுத்தத்தில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் எச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். #Periyarstatue #tamilnews
பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் எச்.ராஜா உருவபொம்மையையும், உருவப்படத்தையும் தீ வைத்து எரித்தனர்.
ஒரத்தநாட்டில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காந்தி தலைமையில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவபடத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் உள்ள கட்ட பொம்மன் சிலை அருகே திராவிடர் கழகத்தினர் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். அவர்கள் கலைந்து செல்லாததால் மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை சந்திப்பில் தி.மு.க.வினர் இன்று காலை எச்.ராஜா உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை பஜார் வீதியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்லா தலைமையில் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்தனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே எச்.ராஜாவை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது திடீரென எச்.ராஜா உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தி.க., தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென சிலர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.
ஆண்டிமடத்தில் திராவிடர் கழகம் சார்பில் எச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி நான்கு ரோட்டில் அவரது உருவப்படத்தை எரித்து ஆர்பாட்டம் நடத்தினர்.
கடலூர் பாரதி சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே அரசியல் கட்சியினர் தீப்பந்தம் ஏந்தி நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எச்.ராஜாவுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
எச்.ராஜாவை கண்டித்தும் திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் குடியாத்தத்தில் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெமிலி பஸ் நிலையத்தில் திராவிட விடுதலை கழகம் சார்பில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது எச்.ராஜாவின் உருவபொம்மையை திராவிட விடுதலை கழக நிர்வாகிகள் எரிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை எரிக்கவிடாமல் தடுத்தனர்.
இதனால் திராவிட விடுதலை கழக நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாணியம்பாடி பஸ் நிறுத்தத்தில் வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் எச்.ராஜா உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். #Periyarstatue #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X