என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து காலி செய்யப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரிய வழக்கு
Byமாலை மலர்6 March 2018 10:19 AM GMT (Updated: 6 March 2018 10:19 AM GMT)
மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து காலி செய்யப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை வியாபாரிகள் சங்கத்தலைவர் ராஜநாகலு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த பிப்ரவரி 2-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப்பகுதியில் இருந்த 20 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தீ விபத்தையடுத்து கோவில் நிர்வாகம் கோவிலில் இருந்த அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தியது. இந்த கடைகளால் தான் எங்கள் குடும்ப வாழ்வாதாரம் உள்ளது. எனவே எங்களுக்கு கடை அமைக்க மாற்று இடம் வேண்டும்.
மதுரை வடக்கு மாரட் வீதியில் பழைய காய்கறி மார்க்கெட் இருந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்று இடம் வழங்குவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். #Tamilnews
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை வியாபாரிகள் சங்கத்தலைவர் ராஜநாகலு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கடந்த பிப்ரவரி 2-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப்பகுதியில் இருந்த 20 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தீ விபத்தையடுத்து கோவில் நிர்வாகம் கோவிலில் இருந்த அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தியது. இந்த கடைகளால் தான் எங்கள் குடும்ப வாழ்வாதாரம் உள்ளது. எனவே எங்களுக்கு கடை அமைக்க மாற்று இடம் வேண்டும்.
மதுரை வடக்கு மாரட் வீதியில் பழைய காய்கறி மார்க்கெட் இருந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்று இடம் வழங்குவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X