search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய வேனையும் ஸ்கூட்டரையும் படத்தில் காணலாம்.
    X
    விபத்தில் சிக்கிய வேனையும் ஸ்கூட்டரையும் படத்தில் காணலாம்.

    பெருந்துறை அருகே வேன்-ஸ்கூட்டர் மோதி விபத்து: 2 வாலிபர்கள் பலி

    பெருந்துறை அருகே வேன் மற்றும் ஸ்கூட்டர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது 21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த தேவா (21).

    இவர்கள் இருவரும் பெருந்துறையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு தற்போது எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணியளவில் அவர்களது நண்பரான சரவணன் என்பவரது ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டு சீனாபுரம் நோக்கி சென்றனர்.

    துடுப்பதியை அடுத்துள்ள துலுக்கபாளையம் பிரிவு அருகே முன்னால்சென்ற ஒரு லாரியை முந்தியபோது, எதிரே திருப்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வேனும் ஸ்கூட்டரும் எதிர் பாராதவிதமாக மோதின.

    இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்பிரபு, தங்கவேல் ஆகியோர் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  #Tamilnews
    Next Story
    ×