என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பூரில் பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர்:
திருப்பூர் கே.செட்டிபாளையம் மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தங்கம்மாள். தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது மகன் விவேகானந்தன் (வயது 13). இவர் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற விவேகானந்தன் மாலை வீட்டுக்கு வந்தார். தனது அறைக்கு சென்ற அவர் வெகு நேரம் கதவை திறக்க வில்லை. மகன் தூங்குகிறான் என்று பெற்றோர் நினைத்தனர்.
நீண்ட நேரம் ஆன பின்னரும் மகன் கதவை திறந்து வெளியே வரவில்லை. இதனையடுத்து கதவை தட்டிப்பார்த்தனர். கதவு உள் பக்கமாக பூட்டப் பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விவேகானந்தன் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி துடித்து அழுதனர்.
இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பதுருன்நிஷா பேகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவேகானந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விவேகானந்தன் அறையில் இருந்து ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் எழுதியிருப்பதாவது:-
நான் பள்ளியில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பேன். இதனை பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் எனது பெற்றோர் போனில் தொடர்பு கொண்டு புகார் செய்தனர். அன்றே நான் தற்கொலைக்கு முயன்றேன். எனது தாய் கதவை தட்டியபோது அப்போது அது முடியாமல்போனது. மாணவர்கள், ஆசிரியர்களால் நான் பாதிக்கப்பட்டேன் என்று எழுதியிருந்தார்.
இது குறித்த வழக்குப்பதிவு செய்த போலீசார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகன் சாவுக்கு அவன் கடிதத்தில் குறிப்பிட்ட 2 ஆசிரியர்கள் மட்டுமே. அவர்கள் தான் மகனை கேலி, கிண்டல் செய்துள்ளனர். அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்தும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்