search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புவனகிரி அருகே கள்ளக்காதலியை கொன்று காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை
    X

    புவனகிரி அருகே கள்ளக்காதலியை கொன்று காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை

    புவனகிரி அருகே கர்ப்பிணி கள்ளக்காதலியை கொன்று காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 43). காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா கணவரை பிரிந்து திருச்சியில் வசித்து வருகிறார்.

    மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி முருகேஸ்வரி (35). கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேஸ்வரி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் சகாதேவனுக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அருகில் உள்ள திருப்பணிநத்தம் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதில் முருகேஸ்வரி கர்ப்பம் அடைந்தார்.

    தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். சகாதேவனுக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சகாதேவனுக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சகாதேவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இந்தநிலையில் அவரது வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக பூட்டிக்கிடந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் புவனகிரி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் சகாதேவன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சகாதேவன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், முருகேஸ்வரி தரையில் பிணமாக கிடந்தார். 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல்களை மீட்டு போலீசார் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்ப்பிணி கள்ளக்காதலியை கொன்று காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews

    Next Story
    ×