search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி பலாத்கார வழக்கில் மாணவருக்கு 7 ஆண்டு ஜெயில்
    X

    மாணவி பலாத்கார வழக்கில் மாணவருக்கு 7 ஆண்டு ஜெயில்

    புதுவையில் பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் மாணவனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக்தாஸ். இவரது மகன் சப்தரிதிதாஸ். பிளஸ்-1 மாணவரான இவர் கடந்த 2011-ம் ஆண்டு குருசுகுப்பத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தனது தாயிடம் கூறி அழுது முறையிட்டார். இதையடுத்து அவரது தாய் புதுவை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    அப்போதைய இன்ஸ்பெக்டர் அஞ்சம்மாள் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சப்தரிதி தாசை கைது செய்தார்.

    இதுதொடர்பான வழக்கு புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பத்மநாபன் நேற்று தீர்ப்பு அளித்தார்.

    அதில், குற்றவாளி சப்தரிதிதாசின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். #Tamilnews
    Next Story
    ×