search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குத்தாலம் அருகே அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு: வகுப்புகளை பவுன்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    X

    குத்தாலம் அருகே அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு: வகுப்புகளை பவுன்ராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    குத்தாலம் அருகே அரசு பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பவுன்ராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய கட்டடங்களில் வகுப்புகளை துவக்கி வைத்தார்.
    குத்தாலம்:

    குத்தாலம் ஒன்றியம் ஸ்ரீகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் திறப்பு விழா நடைபெற்றது. இப்புதிய கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    புதிய கட்டிடங்களில் வகுப்புகள் துவக்க விழாவிற்கு குத்தாலம் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர் அகமது, நிலக்கிழார் அலிஅக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் (பொறுப்பு) ஜான்ஹென்றிராஜ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு விருந்தினராக பவுன்ராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய கட்டடங்களில் வகுப்புகளை துவக்கி வைத்து பேசினார். இங்கு நபார்டு வங்கி உதவியுடன் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் புதிய 10 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகங்கள் 3 கட்டிடங்களாக மூன்றடுக்கில் கட்டப்பட்டு உள்ளன. விழாவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜியாவுதீன், நீலமேகம், வேல்முருகன், ஒப்பந்தக்காரர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் சுகன்யா நன்றி கூறினார். #tamilnews
    Next Story
    ×