என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு மீண்டும் கொலை மிரட்டல்
Byமாலை மலர்23 Feb 2018 2:34 PM GMT (Updated: 23 Feb 2018 2:34 PM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு 2-வது முறையாக கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து இந்து கடவுளான ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார்.
பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு மீண்டும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருச்சி, பாலக்கரை, பெரியார்நகர், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் தலித் கூட்டமைப்பு என்று விலாசமிட்டு எஸ். ராஜேந்திரன் என்பவர் அனுப்பியுள்ளார். அதில், எங்களைப்பற்றி ஏதாவது பேசினால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஜீயர் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக ஜீயருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ராஜபாளையத்தில் நடந்த விழாவில் கவிஞர் வைரமுத்து இந்து கடவுளான ஆண்டாளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் ஆண்டாள் சன்னதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதமும் இருந்தார்.
பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ஜீயர் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அந்த சமயத்தில் அவருக்கு போனில் கொலை மிரட்டல் வந்தது.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு மீண்டும் கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
திருச்சி, பாலக்கரை, பெரியார்நகர், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியார் தலித் கூட்டமைப்பு என்று விலாசமிட்டு எஸ். ராஜேந்திரன் என்பவர் அனுப்பியுள்ளார். அதில், எங்களைப்பற்றி ஏதாவது பேசினால் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஜீயர் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது முறையாக ஜீயருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X