search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 20 கிலோ தங்கம் பறிமுதல்
    X

    இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த 20 கிலோ தங்கம் பறிமுதல்

    புதுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மீது அவர்களுக்கு சந்தேகம் வரவே அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சுமார் 20 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபற்றி கேட்டபோது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் கைது செய்தனர்.

    இந்த தங்கம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
    Next Story
    ×