என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க முதல்-அமைச்சர் மறுப்பு
Byமாலை மலர்18 Feb 2018 9:53 AM GMT (Updated: 18 Feb 2018 9:53 AM GMT)
பிரதமர் மோடி கூறியதால் அ.தி.மு.க.வுடன் இணைந்து அமைச்சர் பதவி ஏற்க சம்மதித்ததாக துணை முதல்-அமைச்சர் பேசியது குறித்து முதல்-அமைச்சர் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
சேலம்:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நதிகள் எந்த மாநிலத்துக்கும் சொந்தமானது இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்த தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த கட்டமாக சட்ட நிபுணர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
கேள்வி: காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை நீங்கள் சந்திப்பீர்களா?
பதில்: ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு உள்ளது குறித்தும், காவிரி பிரச்சினை குறித்தும் அவரிடம் விளக்கி கூறி இருக்கிறோம்.
கே: பிரதமர் மோடி கூறியதால் அ.தி.மு.க.வுடன் இணைந்து அமைச்சர் பதவி ஏற்க சம்மதித்ததாக துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் பேசி இருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ப: அதுபற்றி எனக்கு முழுமையாக தெரியாது. தெரிந்த பிறகு எனது பதிலை சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நதிகள் எந்த மாநிலத்துக்கும் சொந்தமானது இல்லை என்று கூறியுள்ளனர்.
இந்த தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
இதனால் அடுத்த கட்டமாக சட்ட நிபுணர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
கேள்வி: காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை நீங்கள் சந்திப்பீர்களா?
பதில்: ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு உள்ளது குறித்தும், காவிரி பிரச்சினை குறித்தும் அவரிடம் விளக்கி கூறி இருக்கிறோம்.
கே: பிரதமர் மோடி கூறியதால் அ.தி.மு.க.வுடன் இணைந்து அமைச்சர் பதவி ஏற்க சம்மதித்ததாக துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் பேசி இருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ப: அதுபற்றி எனக்கு முழுமையாக தெரியாது. தெரிந்த பிறகு எனது பதிலை சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X