search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க முதல்-அமைச்சர் மறுப்பு
    X

    ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க முதல்-அமைச்சர் மறுப்பு

    பிரதமர் மோடி கூறியதால் அ.தி.மு.க.வுடன் இணைந்து அமைச்சர் பதவி ஏற்க சம்மதித்ததாக துணை முதல்-அமைச்சர் பேசியது குறித்து முதல்-அமைச்சர் கருத்து தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காவிரி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. நதிகள் எந்த மாநிலத்துக்கும் சொந்தமானது இல்லை என்று கூறியுள்ளனர்.

    இந்த தீர்ப்பில் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, அதை குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    இதனால் அடுத்த கட்டமாக சட்ட நிபுணர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

    கேள்வி: காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை நீங்கள் சந்திப்பீர்களா?

    பதில்: ஏற்கனவே பிரதமரை சந்தித்தபோது தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு உள்ளது குறித்தும், காவிரி பிரச்சினை குறித்தும் அவரிடம் விளக்கி கூறி இருக்கிறோம்.

    கே: பிரதமர் மோடி கூறியதால் அ.தி.மு.க.வுடன் இணைந்து அமைச்சர் பதவி ஏற்க சம்மதித்ததாக துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் பேசி இருக்கிறாரே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

    ப: அதுபற்றி எனக்கு முழுமையாக தெரியாது. தெரிந்த பிறகு எனது பதிலை சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×