search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர் செல்வம் கருத்து உண்மைதான்: தா.பாண்டியன் பேட்டி
    X

    ஓ.பன்னீர் செல்வம் கருத்து உண்மைதான்: தா.பாண்டியன் பேட்டி

    மோடி சொல்லி தான் அமைச்சரவையில் இணைந்தேன் என துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உண்மையை சொல்லி உள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறினார்.
    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா. பாண்டியன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    காவிரி நதி நீர் தொடர்பான உச்சநீதி மன்ற தீர்ப்பு கவலையளிக்கிறது. இதில் உச்ச நீதிமன்றத்தை குறை கூற விரும்பவில்லை. கொடுக்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்படுமா என்பது கேள்வி குறியாக உள்ளது.

    இந்த தீர்ப்பை 15 ஆண்டுகள் மேல் முறையீடு கூடாது என்பது கருத்துருவா அல்லது கண்டிப்பான உத்தரவா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

    மேலும் தண்ணீர் வழங்கப்படும் டி.எம்.சி. கணினி மூலம் பங்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கண்காணிக்க மாநிலத்திற்கு ஒரு பிரதிநிதி நியமிக்க வேண்டும்.

    காவிரி நதி நீர் தொடர்பான உச்ச நீதி மன்ற உத்தரவை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனில் பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    அவரிடம் மோடி சொல்லி தான் அமைச்சரவையில் இணைந்தேன் என துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கருத்து குறித்து கேட்ட போது, ஓ.பி.எஸ். உண்மையை சொல்லி உள்ளார் என பதில் அளித்தார்.

    இவ்விவகாரத்தில் மோடி கட்டப் பஞ்சாயத்து செய்தார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்த கருத்துக்கு பதில் அளிக்கும் போது, உலகளவில் மோடி கட்டப் பஞ்சாயத்து தான் செய்து கொண்டிருக்கிறார் என்றும், தமிழகத்தில் பயங்கரவாதம் உள்ளது என்றால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்றும் தா. பாண்டியன் கூறினார். #tamilnews

    Next Story
    ×