search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பிரதமர் மோடி சொன்னதால் அல்ல - அமைச்சர் கே.பி.அன்பழகன்
    X

    அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பிரதமர் மோடி சொன்னதால் அல்ல - அமைச்சர் கே.பி.அன்பழகன்

    தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று சிதம்பரம் வந்தார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால் தான் இரு அணிகளும் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொன்னதாக கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை கட்டி காத்தவர் ஜெயலலிதா.

    அவரது வழியில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல.

    இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். #tamilnews

    Next Story
    ×