என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பிரதமர் மோடி சொன்னதால் அல்ல - அமைச்சர் கே.பி.அன்பழகன்
Byமாலை மலர்18 Feb 2018 4:03 AM GMT (Updated: 18 Feb 2018 4:03 AM GMT)
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று சிதம்பரம் வந்தார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால் தான் இரு அணிகளும் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொன்னதாக கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை கட்டி காத்தவர் ஜெயலலிதா.
அவரது வழியில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். #tamilnews
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று சிதம்பரம் வந்தார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால் தான் இரு அணிகளும் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொன்னதாக கேட்கிறீர்கள். அ.தி.மு.க.வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அவரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தை கட்டி காத்தவர் ஜெயலலிதா.
அவரது வழியில் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல.
இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X