என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழிங்கநல்லூர் பெண் என்ஜினீயரை தாக்கிய 3 கொள்ளையர்கள் கைது
Byமாலை மலர்17 Feb 2018 6:48 AM GMT (Updated: 17 Feb 2018 6:48 AM GMT)
சோழிங்கநல்லூர் அருகே பெண் என்ஜினீயரை தாக்கிய வழிப்பறிப்பில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பெண் என்ஜினீயரான லாவண்யா. சென்னை நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 12-ந் தேதி இரவு மொபட்டில் லாவண்யா பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம் பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு தாழம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஒட்டியம்பாக்கம் - அரசன்கழணி காரனை சாலையில் சென்றபோது பின்னால் வந்த வழிப்பறி கும்பல் லாவண்யா தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார்கள்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லாவண்யா தலையில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி அவளிடம் இருந்த நகை, செல்போன்களை பறித்துக் கொண்டு மொபட்டையும் கொள்ளையர்கள் எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.
இரவு முழுவதும் சாலையோரம் மயங்கி கிடந்த அவரை காலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கிடையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற லாவண்யாவின் மொபட் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே கிடந்தது. அதை போலீசார் மீட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்தது.
இந்த நிலையில் பெண் என்ஜினீயரை தாக்கி வழிப்பறி செய்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, விநாயக மூர்த்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த பெண் என்ஜினீயரான லாவண்யா. சென்னை நாவலூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 12-ந் தேதி இரவு மொபட்டில் லாவண்யா பெரும்பாக்கத்தை அடுத்த நுங்கம் பாளையத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு தாழம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஒட்டியம்பாக்கம் - அரசன்கழணி காரனை சாலையில் சென்றபோது பின்னால் வந்த வழிப்பறி கும்பல் லாவண்யா தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார்கள்.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லாவண்யா தலையில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி அவளிடம் இருந்த நகை, செல்போன்களை பறித்துக் கொண்டு மொபட்டையும் கொள்ளையர்கள் எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.
இரவு முழுவதும் சாலையோரம் மயங்கி கிடந்த அவரை காலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு லாவண்யாவுக்கு சுயநினைவு திரும்பியது.
போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கிடையே கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற லாவண்யாவின் மொபட் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே கிடந்தது. அதை போலீசார் மீட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள். இதில் மொபட்டை ஓட்டி வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்தது.
இந்த நிலையில் பெண் என்ஜினீயரை தாக்கி வழிப்பறி செய்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, விநாயக மூர்த்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X