search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஹெல்ப்லைன் - அமைச்சர் தகவல்
    X

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஹெல்ப்லைன் - அமைச்சர் தகவல்

    மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
    அப்போது அவர் கூறியது:-

    பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பிப்ரவரி 19-ம் தேதி முதல் ஹெல்ப் லைன்திட்டம் தொடங்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஹெல்ப்லைன் திட்டத்தினால், மாணவர்களின் தற்கொலையை தடுக்க முடியும்.

    புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 72 பாடத்திட்டங்கள் மூலம் 12-ம் வகுப்பு படித்த உடனே வேலை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருப்பூரில் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி மாணவர்களும் தேடி வந்து அரசுப் பள்ளியில் படிக்கும் வகையில் உலகத்தரத்தில்  தமிழக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றார். #tamilnews
    Next Story
    ×