என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மரக்காணத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள கரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 20). கூலி தொழிலாளி.
இவருக்கும் அதே பகு தியை சேர்ந்த ஜோதி லெட்சுமி (18) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் 2 பேரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு முத்துவும், ஜோதிலெட்சுமியும் வீட்டை விட்டு வெளியேறினர். மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தீர்த்தவாரி பகுதியில் சந்தித்தனர்.
அப்போது தங்களது பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை நினைத்து மனம் வருந்தினர். அவர்கள் நாம் இருவரும், திருமணம் செய்து கொண்டால் தங்களை வாழ விடமாட்டார்கள் என எண்ணினர். இதனால் 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி அங்கிருந்த ஆலமரத்தில் 2 பேரும் தூக்குப்போட்டு கொண்டனர். அதில் ஜோதிலெட்சுமி தூக்குப்போட்ட துப்பட்டா அறுந்து கீழே விழுந்து விட்டார். முத்து தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
ஜோதிலட்சுமி உடனடியாக தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் முத்து இறந்து விட்டார்.
இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்து கொண்ட முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்